Saturday, January 14, 2012

வேட்டை -சினிமா விமர்சனம் : Vettai Movie Review / Vimarsanam


 
சத்தியமா சொல்லுறன் இது நம்ம சி.பி. சார் ட பதிவ சுட்டது தான் ;))
என்ன நாங்க தன தமிழ் பேஸ்ட் பதிவர் ஆச்சே ;)

http://tamil.way2movies.com/wp-content/uploads/2012/01/vettai-arya-300x294.png
அரசியலிலும் சரி, சினிமாவிலும் சரி ஆபத்பாந்தவனாய் கை கொடுப்பது நம்ம எம் ஜி ஆர் ஃபார்முலாதான்.. அதை கையில்  எடுத்து சக்சஸ் அடைஞ்சவங்களும் உண்டு, கையை சுட்டுக்கிட்டவங்களும் உண்டு./.. இந்த முறை கயில் எடுத்திருப்பது என் லிங்குசாமி... சாஃப்ட் ஹீரோ மாதவனையே ரன்னில் ஆக்‌ஷன் ஹீரோ ஆக்கியவர்.. கேட்கவா வேணும்.. மசாலா பொங்கல் படைச்சிருக்கார்.. 

எங்க வீட்டுப்பிள்ளை பயந்தாங்கொள்ளி எம் ஜி ஆர் கேரக்டர் மாதவனுக்கு.. போலீஸ் டிபார்ட்மெண்ட்டில் இருந்த அப்பா இறந்ததும் ஆட்டோமேடிக்காக இவருக்கு எஸ் ஐ போஸ்ட் வருகிறது.. கலைஞருக்குப்பிறகு ஸ்டாலின் சி எம் ஆக முயற்சிப்பது போல். ஆர்யா அழகிரி மாதிரி ஒரு அதிரடி பேர்வழி.. வேலை ஏதும் இல்லா வெட்டாஃபீஸ்.. ஆனா இவங்க 2 பேரும் கலைஞர் பசங்க மாதிரி அடிச்சுக்கலை,.. ஒத்துமையா இருக்காங்க.. போலீஸ் டிபார்ட்மெண்ட்ல இருந்தாலும் எல்லா கேஸ், சண்டை எல்லாத்தையும் டீல் பண்றது ஆர்யா. அதுக்கான பலனை அனுபவிப்பது மாதவன்.. லோக்கல் பாஷைல சொல்லனும்னா  கெடா வெட்றது ஆர்யா, பொங்கல் சாப்பிடறது  மாதவன்...

ஹீரோக்கள் 2 பேரு.. அண்ணன் , தம்பின்னா ஹீரோயின் எப்படி இருக்கனும்? கரெக்ட்.. அவங்களும் அக்கா தங்கை தான்.. ஆர்யாவுக்கு அமலா பால், மாதவனுக்கு சமீரா ரெட்டி.. மாதவன் சார்பா பொண்ணு பார்க்க போன ஆர்யா அண்ணியை ஓக்கே சொல்ல தங்கை அமலா பால் ஆர்யாவுக்கு த்ரட் விடறார்.. அதாவது நூல் விடறாரு.. 





http://images.news.pluzmedia.com/slide/big_Vettai__The_season_of_celebration_begins-f50d7d5ae3ea639eb139216bc3dd496e.jpg

படம் ஃபேமிலி, லவ் , ஜாலியா போனா அதுல என்ன இண்ட்ரஸ்ட் இருக்கு? அந்த ஏரியாவுல 2 தாதாங்க.. ( ஆனா 2 பேரும் பக்கா சோதாங்க.. )அந்த தாதாவோட சரக்கு லாரியை ஆர்யா மடக்கி மாதவன்கிட்டே ஒப்படைக்க மாதவன் நல்ல பேர் வாங்கறார்.. நாளா வட்டத்துல மாதவன் டம்மி, ஆர்யா தான் மம்மி அப்டிங்கற மேட்டர் வில்லன் குரூப்க்கு தெரிஞ்சுடுது.. சசிகலாவை ஜெ  கூப்பிட்டு லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கற மாதிரி மாதவனை அடிச்சு துவைச்சு காயப்போட்டுடுது வில்லன் குரூப்..

 நாட்டுக்கு ஒரு நல்லவன்ல ரஜினி குஷ்பூ கிட்டே சொல்வாரே அந்த மாதிரி ஆர்யா சொல்றாரு , எத்தனை நாளைக்கு  நானே உன்னை காப்பாத்திட்டு இருப்பேன், நீயும் வீரன் ஆகு  படத்தை சீக்கிரம் முடிக்கனும்கறாரு.. 

வைஜயந்தி ஐ பி எஸ் படத்துல வர்ற மாதிரி 4 கி மீ ரன்னிங்க், 18 பஸ்கி எடுத்து  உடனடி சேமியா, திடீர் இட்லி மாதிரி மாதவன் வீரன் ஆகிடறார்.. இப்போ எண்ணி பாருங்க, மொத்தம் 2 வீரன்க, வில்லன்களும்  2 , ஹீரோயின்களும் 2 .. ஹி ஹி  ( எனக்கு என்ன குறைன்னா 2 வில்லிகளையும் காட்டி இருந்தா  இன்னும் செமயா இருந்திருக்கும்.. )



http://www.boxoffice9.com/gallery/var/albums/Tamil-Movie-Gallery/Tamil-Movie-Stills/Vettai-Stills,Photos,Pictures/Vettai%20Movie%20Stills00.jpg?m=1307983153

இடைவேளை வரை ஜாலியா ஆட்டம், பாட்டம் , கொண்டாட்டம்னு போகுது, அதுக்குப்பிறகு ஆக்‌ஷன் அதிரடி தான்.. பக்கா கமர்ஷியல் மசாலா.. இந்தப்படத்தை ஹிந்தில வேற பண்ணப்போறாராம் அவ்வ்வ்வ் , ஆனா அங்கேயும் ஹிட் ஆக்கிடுவார்னு தோணுது.. 

இப்போ இருக்கற ஹீரோக்கள்ல ஆர்யா மாதிரி ஒரு அசால்ட் கேரக்டரை நான் பார்த்ததே இல்ல.. எதுக்குமே அலட்டிக்காம சர்வ சாதாரணமா பாடி லேங்குவேஜ்ல தெனா வெட்டு, முகத்தில் எப்போதும் ஒரு அலட்சியம் , நல்லா கேரக்டர்ல மேட்ச் ஆகறார்.. அமலா பால் குளிச்சுட்டு டர்க்கி டவல் மட்டும் கட்டிட்டு வந்து அவரை கிராஸ் பண்ணி போன பின் தாங்க்ஸ் சொல்றாரே செம.. ஒரே அப்ளாஸ்தான் தியேட்டர்ல.. 

மாதவன்.. இயல்பாவே சாஃப்ட் கேரக்டர் என்பதால் அவர் போலீஸ் யூனிஃபார்மில் பயந்துநடுங்குவது செம காமெடியாக இருக்கு.. ஆர்யா செய்யும் வீரசாகசங்கள் எல்லாம் இவர் செஞ்சதா மக்கள் நினைக்கறது இவருக்கு  தெம்பையும், பயத்தையும் ஒரு சேரத்தர்றதை அவர் நல்லாவே காட்டி நடிச்சிருக்கார்.. 

vettai tamil movie stills00-5

 

அமலா பால் தான் ஹீரோயின், ஏன்னா அவருக்குத்தான் 2 டூயட்.. அதுவும் இல்லாம கார்ல சரச சலாபம் , லிப் டூ லிப் கிஸ் அடிக்கறதுன்னு பாப்பாவுக்கு கொஞ்சம் கூட பயமே இல்லை, பாவம் நாம தான் பயந்து பயந்து பார்க்க வேண்டி இருக்கு..  நடன காட்சிகளில் அவருக்கு நளினம் சரியாக வரவில்லை.. ( ஒரு வேளை இயற்கையாவே அவருக்கு நளினம் வர்லையோ என்னவோ?)

சமீரா ரெட்டி கொஞ்சம் முற்றல் முகம் தான் ( முகம் மட்டுமா? நடிப்பும் தான்னு சொல்ல வந்தேன் ஹி ஹி ) அவர் பல காட்சிகளில் ஓவர் ஆக்டிங்க்.. நடன காட்சிகளில் இவர் ஸ்கோர் பண்ணிடறார்.

2 ஹீரோயின்களுக்கும், இயக்குநருக்கும் பொதுவான ஒரு அட்வைஸ்,, கிராமத்துப்பெண் கேரக்டர்னா  இயல்பான மேக்கப்பில் கொஞ்சம் வெட்கம், நாசூக்கு எல்லாம் முகத்துல, பாடி லேங்குவேஜ்ல காட்டனும்..  அரை கிலோ பவுடர், கால் கிலோ ரோஸ் பவுடர், கால் லிட்டர் ஃபேரன் லவ்லி எல்லாம் போட்டுக்கிட்டு தாவணி போட்டா அது வில்லேஜ் கேர்ள் ஆகிடுமா? ( வாகை சூடவா இனியாவை ஒரு முறை பார்க்கவும்)

தூத்துக்குடி தான் கதைக்களன் என்பதால் வழக்கம் போல் அரிவாள், அடிதடி. வெட்டு எல்லாம் உண்டு என்றாலும் இயக்குநர் சாமார்த்தியமாக லவ் , ஃபேமிலி மேட்டர் கொஞ்சம் சேர்த்து போர் அடிக்காமல் க்தையை நகர்த்துகிறார்.. 




Vettai Movie Stills00-15

 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1.  ஓப்பனிங்க் ஷாட்ல ஆர்யா சினிமா தியேட்டர்ல் பண்ற ஆக்‌ஷனை திரைல ஓடற ரவுத்திரம் பட ஹீரோ ஜீவா ஆச்சரியமா பார்க்கறதை காட்ன விதம்.. 

2.  முதல் பாடல் காட்சியில் ஏகப்பட்ட பனை மரங்களை ஒரே ஷாட்டில் அழகாக ஏரியல் வியூவில் காட்டியது , ஒளிப்பதிவாளருக்கு ஒரு ஷொட்டு ( நீரவ் ஷா)

3.  மாதவன் எஸ் ஐ ஆக  ஜாயின் பண்ணும்போது உயர் அதிகாரியாடு சல்யூட் அடிக்கும் 3 முறையும் அவர் ஸ்டிக் தவறி கீழே வழிவதும் அவர் வழிவதும் செம காமெடி..

4.  மாதவனை நாசர் பாராட்டி அடுத்த பிராஜக்ட்க்கு தயார் செய்து அனுப்ப முயற்சிக்கையில் போலீஸ் ஸ்டேஷன் வாசலில் பலி ஆட்டை சிம்பாலிக்காக காட்டுவது கல கல காமெடி.. 

5.  கட்டிப்புடி பாடல் காட்சியில் அமலா பாலின் அழகை  எல்லாம் அள்ளிகொள்ளும் விதமாய் ஆடை வடிவமைப்பு செம..  க்ளை மாக்ஸ் குத்துப்பாட்டான பப்பாறப்பா பாட்டில் நடன அமைப்பு அள்ளிக்கொள்கிறது.. லொக்கேஷன் செலக்‌ஷனும் செம.. 

6. யுவன் சங்கர் ராஜா இசையில் தைய தக்கா தக்க, டம டம  பாடல்கள் ஒன்ஸ்மோர் சொல்ல வைக்கிறது.

7 . தாதா கதை என சலித்துக்கொள்ளாதபடி புத்திசாலித்தனமாய் திரைகதையில் ஆர்யா - அமலா பால் காதலை நுழைத்த விதம்.. 


Vettai Movie Stills00-5

.
இயக்குநர் கோட்டை விட்ட  சில இடங்கள்

1.  தனக்குப்பிடிக்காத அமெரிக்க மாப்ளையுடன் காரின் பின் சீட்டில் வரும் அமலா பால் ஜன்னல் ஓரம் உக்கார வேண்டியதுதானே, ஏன் அப்படி ஒட்டி உக்காந்துட்டு வரனும்? இந்த லட்சணத்துல காதலன் ஆர்யா டிரைவிங்க் த கார்.. 


2. அமெரிக்க மாப்ளையை போலீசில் மாட்டி விட ஆர்யா கோக் என சொல்லி சரக்கை கொடுக்கறா... என்ன தான் அவன் கேனை மாப்ளையா இருந்தாலும் சரக்கு வாசத்துக்கும், கோக் வாசத்துக்கும் வித்தியாசம் தெரியாம இருக்குமா?

3. ஒரு சீன்ல வில்லன்கள் புடை சூழ நிற்கும்  ஆர்யா தன் அண்ணன்மாதவன்க்கு ஃபோன் போட செல் ஃபொன்ல நெம்பரை டைப் பண்றார்.. அது அவர் ஃபோன், மாதவன் அவர் சொந்த தம்பி. ஆல்ரெடி ஸ்டோர் ஆகி இருக்காதா நெம்பர்? வழக்கமா பிரதர்னோ, அவர் பேரோ வரனும்.. ஆனா ஏன் அவர் ஒவ்வொரு நெம்பரா டைப் பண்றார்?

4.  மாதவனுக்கு ஆக்சிடெண்ட் ஆகி 3 நாள்  வீட்டுக்கே வர்லை.. சமீரா ரெட்டி அப்போ எல்லாம் கண்டுக்காம ஆர்யா மாதவனை வீட்டுக்கு கூட்டிட்டு வர்றப்போ  பதர்றாரே அது எப்படி? அதே போல் விபத்து நடக்கும்போது நெற்றியில், காது அருகில் பயங்கர காயங்களோட இருந்த மாதவன் 3 நாள்ல வீட்டுக்கு வர்றப்ப முகம் டென்னிஸ் கோர்ட் மாதிரி நீட்டா இருக்கே அது எப்படி?

5.  க்ளைமாக்ஸ்ல  வில்லன் ஆட்கள்  சமீரா வீட்டுக்குள்ள நுழைஞ்சிடராங்க..  உடனே சமீரா மாதவனுக்கு தகவல் தெரிவிக்க , அவர் வீட்டை தாழ் போட்டுட்டுஅங்கேயே இரு, நான் வந்துடறேன்கறார்.. கொஞ்ச நேரத்தில் சமீராவின் தங்கை அமலா பால் பர்ச்சேஸ் முடிச்சு வீட்டுக்கு வந்து வில்லன் கிட்டே மாட்றார்.. மாதவனுக்கு ஃபோன் செஞ்ச சமீரா தன் தங்கைக்கு ஃபோன் செஞ்சு இப்போ வராதே என ஏன் சொல்லலை?

Vettai Movie Stills00-2


பம் பம்  பாடல் காட்சியில் ரன் பட தேரடி வீதியில் தேவதை வந்தா பாட்டின், நடன அமைப்பின் பாதிப்பு தெரியுது.. 

ஏ செண்ட்டர்களில் 60 நாட்கள், பி செண்டர்களில்  40 நாட்கள், சி செண்ட்டர்களில் 20 நாட்கள் ஓடலாம்.. 

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 41

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - நன்று 

சி,பி கமெண்ட் - ஆக்‌ஷன், ஜாலி டைம் பாஸ் பிரியர்கள் பார்க்கலாம்

ஈரோடு ஆனூர் தியேட்டரில் படம் பார்த்தோம் ( வித் நல்ல நேரம் சித்தோடு சதீஷ் )


Vettai Movie Stills00-23

Friday, January 13, 2012

நண்பன் திரைப்படம் விமர்சனம் :


சத்தியமா சொல்லுறன் இந்த பதிவு நம்ம கேபிள் சங்கர் சார் க்கு உரித்தானது..

ஆனாலும் கோப்பி + பேஸ்ட்  எல்லாருக்கும் பொதுவானது



nanban-stills
ஷங்கர், விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ், ஹாரிஸ் என்று தமிழ் சினிமாவில் எப்போதாவது ஒரு முறைதான் இம்மாதிரியான காம்பினேஷன் ஏற்படும். அம்மாதிரி ஏற்படும்போது அதற்கான எதிர்பார்ப்பும் எகிறிவிடும். பல சமயங்களில் எதிர்பார்ப்புக்கு மாற்றாக அப்படங்கள் அமைந்துவிடுவது உண்டு. அப்படிப்பட்ட ஹைஃபை ஏற்றிய இந்த நண்பன் அதை தக்கவைத்தானா? என்பதை பார்போம்.
nanban-movie-latest-photos-02 காணாமல் போன தன் நண்பனை தேடி அலையும் மற்ற இரு நண்பர்கள் தங்களின் கடந்த காலத்து காலேஜ் வாழ்க்கையை நினைத்து பார்க்க என்று ஆரம்பிக்கிறது கதை. இஞ்ஜினியரிங் காலேஜில் படிக்கும் மூன்று இளைஞர்களின் கதை. சத்யராஜ் முதல்வராய் இருந்து  நடத்தும் டெல்லியின் முக்கியமான இஞ்ஜினியரிங் காலேஜில், பொருளாதார முறையில் வெவ்வேறு நிலையில் இருக்கும் மூன்று இளைஞர்களான, விஜய், ஸ்ரீகாந்த், ஜீவா என்கிற மூன்று பேரை சுற்றி நடக்கும் கதை. விஜய் ஒரு பணக்கார வீட்டு இளைஞன், ஸ்ரீகாந்த் ஒரு மிடில்க்ளாஸ், ஜீவா வறுமைக் கோட்டுக்கு மிக அருகில் இருப்பவன். இவர்களுக்குள் நடந்த அந்த சில வருட காலேஜ் வாழ்க்கையையும் அவர்களின் வெற்றி தோல்விகளையும் பற்றியக் கதை தான் இப்படம்.
nanban-movie-latest-photos-05 ஆரம்பத்தில் ஒவ்வொரு கேரக்டரையும் அறிமுகப்படுத்தும் காட்சியிலேயே இம்ப்ரெஸ் செய்ய ஆரம்பித்துவிடுகிறார்கள். ஸ்ரீகாந்த் கேரக்டரை அறிமுகப்படுத்தும் காட்சியில் ஒருபழைய ஏர்கண்டிஷனரை காட்டி தங்களுடய பொருளாதாரத்தை பற்றி மகனிடம் சொல்லும் அப்பா, இன்னொரு பக்கம் ஜீவாவின்  வழக்கமான பரரலைஸ்ட் அப்பா, கல்யாணத்துக்கு காத்திருக்கும் அக்கா, தனி ஒருத்தியாய் குடும்பத்தைக் காப்பாற்றும் அம்மா என்பதை வழக்கமாய் சொலலாமல் படு காமெடியாய் வெளிப்படுத்தியக் காட்சி, சத்யராஜ் தங்களுடய மாணவர்களுக்கு டெரராய் ஒரு ஸ்பீச் கொடுக்கும் காட்சியில் அங்கேயிருக்கும், படிப்பில் ஆர்வமிருக்கும் மில்லிமீட்டர் சிறுவன், அவர் பேசுவதை வரி மாறாமல் மைமிங் செய்வதாகட்டும், பல லட்ச ரூபாய் செலவு செய்து கண்டுபிடித்த அஸ்ட்ரோனாட் பென்னை பற்றி சொல்லும் போது அதை மிக அலட்சியமாய் ஏன் அவர்கள் பென்சில் உபயோகிக்க கூடாது? என்று கேட்டு மூக்குடைபடுவதாகட்டும். ஒவ்வொரு காட்சியும் நச்சென்று உட்காருகிறது.

ஏற்கனவே இந்தியில் பார்த்த படம் தான் என்றாலும் மீண்டும் இவர்கள் காம்பினேஷனில் பார்க்க ஆர்வம் குறையவேயில்லை. அதற்கு முக்கிய காரணம் காஸ்டிங். கொஞ்சமே கொஞ்சம் ஸ்ரீகாந்ந்தும் இலியானாவும்தான் இடிக்கிறார்களே தவிர மற்றவர்களெல்லாம் பிக்சர் பர்பெக்ட். பொமன் இரானியை பார்த்தவர்களுக்கு சத்யராஜின் நடிப்பு கொஞ்சம் அதிகப்படியாய் தோன்றினாலும் அசத்தலான நடிப்பு. ஒரு சில காட்சிகளைத் தவிர. முக்கியமாய் விஜய் க்ளாஸ் நடத்தும் காட்சியில் அவர் புத்தகத்தை புரட்டும்படியான ரியாக்‌ஷனில் இயல்பை விட நாடகத்தனம் தான் அதிகமானதாய் இருந்தது. மற்றபடி  மிகச் சிலருக்கே அவர்கள் வயதுக்கேற்ற கேரக்டர்கள் கிடைக்கும் போது மேலும் மிளிர்வாரள். சத்யராஜ் ஜொலிக்கிறார்.
nanban-movie-latest-photos-09மாதவன் கேரக்டரில் ஸ்ரீகாந்த் படத்திற்காக உடல் இளைத்து மிக இளைஞன் ஆகியிருக்கிறார். உழைபிற்கேற்ற பலன் இவருக்கு கிடைப்பது நிச்சயம். தனியாய் இவருக்காக காட்சிகள் ஏதுமில்லாவிட்டாலும் அப்பாவிடம் தன் விருப்பத்தை சொல்லும் காட்சியில் மனதில் நிற்கிறார். அதே போல விஜய்யுடன் சேர்ந்தால் இனி தன் வாழ்க்கை அவ்வளவுதான் என்று முடிவு செய்து, சத்யனின் அறையில் போய் செட்டிலாகிவிடும் ஜீவாவை அவர்களுடன் சேர்க்க செய்யும் காட்சிகள், ஜீவாவின் அப்பாவிற்கு உடல் நிலை சரியில்லாத போது ஸ்கூட்டியில் வைத்து ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்திருக்க, ஜீவா, ஸ்ரீகாந்த், விஜய் சந்திக்கும் காட்சி செம நெகிழ்ச்சி என்றால், நட்பு பெரிதா? இல்லை தன் வாழ்க்கை பெரிதா என்ற யோசனையில் வேறு வழி தெரியாமல் மாடியிலிருந்து குதித்து தற்கொலை முயற்சி செய்யுமிடத்திலும், கேம்பஸ் இண்டர்வியூ அட்டெண்ட் செய்யுமிடத்திலும் நெகிழ வைக்கிறார்.

கதாநாயகி என்கிற அந்தஸ்து இலியானாவுக்கு கொடுக்கப்பட்டிருப்பதாலும், தனியாய் ரெண்டு பாடல்கள் இருப்பதாலும் அவரைப் பற்றி சொல்ல வேண்டிய கடமையாகிறது. சைஸ் ஜீரோவிலிருக்கும் இவரை பார்த்தால் வத்திப் போன கொத்தவரங்காய் போல் இருக்கிறார். இவரை விட அவரது அக்கா சிவா மனசுல சக்தி கதாநாயகி அனுயா க்யூட்டாகத் தெரிகிறார். மற்றபடி இலியானாவின் நடிப்பை விட அவரது இடுப்பு ஒரு பாடல் முழுவதும் நடித்திருக்கிறது. வாழ்த்துக்கள் இலியானா இடுப்புக்கு.
 nb4இவரையெல்லாம் விட மிக முக்கியமான கேரக்டர் சத்யனுக்கு. அவர் எனக்கு நண்பர். நல்ல சினிமா ஆர்வமுள்ளவர். தயாரிப்பாளர் மாதம்பட்டி சிவகுமாரின் மகன். அவர் கதாநாயகனாக நடித்து இரண்டு படங்கள் வெளிவந்த போதெல்லாம் சொல்வேன். கதாநாயக வேடம் தவிர்த்து பாண்டியராஜன் போல காமெடி கம் ஹீரோ கேரக்டர் செய்யுங்கள் நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று. பின்பு அவர் முழுக்க தன்னை காமெடியனாக மாற்றிக் கொண்டு வெற்றியடைந்த போது கூட என்னிடம் நான் சொன்னதை நினைவு கூர்ந்தார். இயக்குனர் ஷங்கர் இந்தப் படத்தின் ஆணிவேரான முக்கிய கேரக்டரில் அவரை நடிக்க வைத்து அவரை ஒரு நல்ல நடிகர் என்பதையும் நிருபிக்க வாய்ப்பளித்திருக்கிறார். அதை சத்யன் முழுவதும் பயன்படுத்தியிருக்கிறார். வாழ்த்துக்கள் சத்யன் இனி உங்களுக்கு நிஜமாகவே ஏறுமுகம்தான்.
 
3 இடியட்ஸில் அமீரை பார்க்கும் போது நாற்பது வயதுக்காரரான அவரது நடிப்பில் இருபது வயது ஆளை தெரிய வைத்த முனைப்பு தெரியும். ஆனால் விஜய்யின் நடிப்பில் இருக்கும் இளமையும், துள்ளலும் அவர் மிகவும் சிரமப்படாமலேயே நச்சென பொருந்திவிடுகிறார். மிக கேஷுவலான நடிப்பு. சட்டென கண்களில் தெரியும் குறும்பு, இரண்டு கைகளையும் பாக்கெட்டில் விட்டுக் கொண்டு பார்க்கும் பார்வை, நண்பர்களுக்காக ஓடி ஓடி உதவும் கருணை, வசந்த்தின் ப்ராஜெக்டை செயல்படுத்த முனையும் அவரின் கண்களில் தெரியும் ஆர்வமென்று தன்னால் முடிந்த அளவிற்கான உழைப்பை சரியான படத்திற்கு செலவிட்டிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். அவரின் படங்களில் நிச்சயம் சொல்லிக் கொள்கிற வகையான படம் என்பதில் ஐயமேயில்லை.  விஜய் வழக்கமாய் பார்க்க அழகாய் இருக்கும் படமெல்லாம் பெரியதாய் ஓடியதில்லை. சச்சின், அழகிய தமிழ் மகன் ஆகிய படங்களை உதாரணமாய் சொல்லலாம். ஆனால் அதை உடைத்திருக்கும் படம் நண்பன்.
nb2ஹாரிஸின் இசையில் ஏற்கனவே முத்துகுமாரின் ஆல் இஸ் வெல், மற்றும் மதன் கார்க்கியின் அஸ்கு லஸ்கா பாடல்கள் ஹிட் லிஸ்டில் இருப்பதால் மீண்டும் அதை பற்றி சொல்ல வேண்டியதில்லை. மீண்டும் பின்னணியிசையில் வீழ்ந்திருக்கிறார். பல இடங்களில் இந்த மாதிரியான சாப்ட் படங்களிற்கு ஒவ்வாத இரைச்சல் அதிகம்.

படம் முழுக்க இளமை பொங்கும் வண்ணங்கள் பொங்கி வழிகிறது ஓளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில். காலேஜ் காம்பஸ் டாப் ஆங்கிள் காட்சிகளாகட்டும், பாடல் காட்சிகளாகட்டும், எங்கும் இளமை பொங்கி வழிகிறது. க்ளைமாக்ஸ் காட்சியில் ஒளிப்பதிவாளரும், எடிட்டரும் மற்றவர்களோடு இணைந்து உயிர் கொடுத்திருக்கிறார்கள்.
nb5பாடல்களோடு வசனத்தையும் எழுதியிருப்பவர் மதன் கார்க்கி. பெரும்பாலும் இந்தியில் பேசிய வசனங்களின் தமிழ் பதிப்பைத்தான் எழுதியிருக்கிறார். ஒரிரு காட்சிகளைத் தவிர. முக்கியமாய் டெக்னிக்கல் வார்த்தைகள் வரும் காட்சிகளிலும்,  க்ளைமாக்ஸில் மில்லிமீட்டர் தான் விஜய்யுடன் வந்த கதையை சுருக்கமாய் சொல்லுமிடத்தில் “திருக்குறள் அளவுல ஒரு ப்ளாஷ்பேக்கையே சொல்லிட்டான்பாரு” என்கிற வசனததை குறிப்பிடலாம். அதே போல் சத்யனின் மேடைப் பேச்சுக் காட்சி. கற்பிப்பு, கற்பழிப்பு என்ற வார்த்தை உல்டாக்களை வைத்து எழுதப்பட்ட அந்த ஐந்து நிமிட டயலாக் என்ன தான் இந்தியில் வந்த “சமத்கார்” “பலாத்கார்” என்பதன் உல்டா என்றாலும் பாராட்டுக்குறியது.

வழக்கமாய் தன் கதை திரைக்கதை இயக்கும் ஷங்கர் இம்முறை வேறொருவர் கதை, திரைக்கதையில் பயணித்திருக்கிறார். ஒரிரு பாடல் காட்சிகளைத்தவிர, அப்படியே இந்தி படத்தில் என்ன வந்ததோ அதையே பின்பற்றியிருக்கிறார். ஏற்கனவே இப்படத்தில் வரும் ப்ரீ க்ளைமாக்ஸ் பிரசவக் காட்சியை எந்திரனில் பயன்படுத்தியிருப்பார். இந்தப்படத்தை அவர் எடுக்கப் போகிறார் என்றதும் இந்த காட்சிக்கு பதிலாய் என்ன செய்யப் போகிறார் என்ற ஒரு ஆவல் என்னுள் இருந்து கொண்டேயிருந்தது. கொஞ்சம் கூட அசராமல் அதே காட்சியை வைத்து ஒரிஜினல் படத்தில் கொடுத்த உணர்வுகளை சரியாகக் கன்வே செய்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். ஏன் ஒரிரு காட்சிகளில் ஷாட்களில் கூட அப்படியே எடுத்திருக்கிறார் என்பது இவரைப் போன்ற கேலிபர் உள்ள இயக்குனரின் தகுதிக்கு கொஞ்சம் மாற்றுக் குறைவேயானாலும், அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஒரு சில காட்சிகளை மாற்றிவிட்டு திரைக்கதை தங்கள் பெயரை போட்டுக் கொள்ளும் இயக்குனர்களிடையே, வேறொரு எழுத்தாளர் எழுதிய திரைக்கதைக்கு மரியாதை கொடுத்து அவருக்கு கிரெடிட் கொடுக்கும் தன்மையை பார்க்கும் போது மேன் மக்கள் மேன் மக்களே என்று பாராட்டத்தான் தோன்றுகிறது. என்ன இந்தியில் தான் ஒரிஜினல் எழுத்தாளர் சேத்தன்பகத்தின் பெயரை கடைசியில் போட்டார்கள். இப்படத்தில் அதையும் போடவில்லை. குறையென்று சொல்லப் போனால் கொஞ்சம் லெந்தியான முதல் பாதி, கொஞ்சம் ப்ரீசிங்காக வரும் வசனங்கள்.  இந்தியில் வந்தது போலவே ஆபீஸ் ரூமில் ஷேவ் செய்யும் காட்சியை கூட மாற்றாதது. மற்றும் இந்த மாதிரியான ராஜா டிரேட்மார்க் ரீமேக்கிற்கு ஷங்கர் அவசியமா?, படத்தின் நீளம் போன்ற சின்னச் சின்ன விஷயங்கள் பெரிதாக தெரியவில்லை.
நண்பன் – ஆல் ஈஸ் வெல்
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Thursday, January 12, 2012

நண்பன் - சினிமா விமர்சனம் : Nanban Tamil Movie Review


நண்பன் - அமைதியான வெற்றி -சினிமா விமர்சனம் by : சி.பி.செந்தில்குமார்

http://1.bp.blogspot.com/-DaD1xrxq6pk/TwJkYRq63nI/AAAAAAAACyc/CYNmDIX2JMM/s1600/Nanban+movie+stills+nanban.jpg

ஆர்ப்பரிக்கும் அருவியை இயற்கையின் படைப்பாகிய பாறைகள் அமைதிப்படுத்தி ஓடை ஆக்கும்போது, நதியாகி ஓட வைக்கும்போது நீர் நிலைகள் அமைதியான அழகு பெறுகின்றன.. தமிழ்த்திரை உலகில் ரஜினிக்கு அடுத்து மாஸ் ஹீரோ  அந்தஸ்து உள்ளவரும்,கிராண்ட் ஓப்பனிங்க் வேல்யூ உள்ளவருமான விஜய்  எந்த விதமான ஹீரோயிசம், பஞ்ச் டயலாக்ஸ், சண்டைக்காட்சிகள் இல்லாமல் சேரன் போல் யதார்த்த நாயகனாக கதைக்கு என்ன தேவையோ அதை மட்டும் கொடுக்கும் அண்டர் ப்ளே ஆக்டிங்க் ஹீரோவாக   நடித்ததற்காக அவரையும், அப்படி நடிக்க வைத்ததற்கு ஷங்கரையும் பாராட்டலாம்..