Thursday, July 12, 2012

Police Officer Arrested in Nawalpitiya


Police Arrests 
சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த பொலிஸ் அதிகாரி! : Tamil Copy Paste Blog

பாடசாலை மாணவியொருவரை பாலியல் வன்புணர்ந்த குற்றச்சாட்டில் நாவலப்பிட்டிய காவல்துறையில் பணியாற்றிவரும் ஒருவர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த காவல்துறை அதிகாரி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நாவலப்பிட்டி காவல்நிலையத்திற்கு கிடைத்த அவசர முறைப்பாட்டை விசாரிப்பதாக செல்வதாகக் கூறி வெளியேறிய காவல்துறை அதிகாரி, சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்டுள்ள 14 வயது சிறுமியை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தவுள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்

No comments:

Post a Comment